Monday, October 29, 2012

ஆகாய நுதலில் ஆனந்தமுத்தம்

user posted image


கண்களை இமைகள் வருடியபோது
கருமணிக்குள் உன் உருவம் பதிந்து
கண்களின் பார்வையாக நீ என்னுடனே
கலந்துவிட்டாய் என்பதை உணர்ந்தேன்

உதடுகளை நாக்கு வருடிக்கொண்டபோது
உதட்டில் பதிந்திட்ட உன் முத்திரை
உள்ளமெங்கும் உவகை பொங்கிட இதழ்
உரசி உதிர்த்த இலக்கண வார்த்தை அது

கைகளை மெல்லென வருடிக்கொண்டபோது
இணைந்த எம் கரங்களின் ஈரமான வியர்வை
இன்னும் பசை நீங்காத விரல் இடுக்களில்
உன் கை விரல்கள் பதிந்தபடி

தலையினை வருடியபோதே நீ
சிந்திய கண்ணீர்த்துளிகள் என் தோள்களை
நனைத்தச் சென்றபோது கலங்கிய என் கண்களின்
கண்ணீர்துளிகள் கன்னங்களில் கோலங்களாய்

முன் நெற்றியை வருடியபோதே உணர்ந்தேன்
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தப் பொழுதுகள் தந்த ஆனந்தம்

முத்தத்தில் தொடங்கி மோகத்தில்
சத்தமில்லாமல் என்னுள் சங்கமித்து
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தக் கணப்பொழுதுகள் என்றும் நினைவில்
ஆனந்த ராகமாய்...

No comments:

Post a Comment