கண்களை இமைகள் வருடியபோது
கருமணிக்குள் உன் உருவம் பதிந்து
கண்களின் பார்வையாக நீ என்னுடனே
கலந்துவிட்டாய் என்பதை உணர்ந்தேன்
உதடுகளை நாக்கு வருடிக்கொண்டபோது
உதட்டில் பதிந்திட்ட உன் முத்திரை
உள்ளமெங்கும் உவகை பொங்கிட இதழ்
உரசி உதிர்த்த இலக்கண வார்த்தை அது
கைகளை மெல்லென வருடிக்கொண்டபோது
இணைந்த எம் கரங்களின் ஈரமான வியர்வை
இன்னும் பசை நீங்காத விரல் இடுக்களில்
உன் கை விரல்கள் பதிந்தபடி
தலையினை வருடியபோதே நீ
சிந்திய கண்ணீர்த்துளிகள் என் தோள்களை
நனைத்தச் சென்றபோது கலங்கிய என் கண்களின்
கண்ணீர்துளிகள் கன்னங்களில் கோலங்களாய்
முன் நெற்றியை வருடியபோதே உணர்ந்தேன்
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தப் பொழுதுகள் தந்த ஆனந்தம்
முத்தத்தில் தொடங்கி மோகத்தில்
சத்தமில்லாமல் என்னுள் சங்கமித்து
ஆகாய நுதலில் ஆனந்தமாய் முத்தமிட்ட
அந்தக் கணப்பொழுதுகள் என்றும் நினைவில்
ஆனந்த ராகமாய்...
No comments:
Post a Comment