Sunday, October 28, 2012

வீரம் விளைந்த மண்ணின் விடுதலை வித்துக்கள்

என் தாய் என் மூச்சும் கலந்தது என் தாய் நாடு
என் வாழ்வின் ஆணிவேராய் என் சுவடுகள்
நிறைந்த அந்த வேரின்வழியே அந்நியன் ஆதிக்கவெறி
நுழைவதும் அதனூடே அவன் என் தாய் மண்பறிப்பும்

காணச்சகியாமல் தன்னலம் கருதாத் தலைவன்
புறப்பட்டான் செங்களமாட செஞ்சேனைக்கூட்டமென
அணிவகுத்தன மறவர் படைகள் ஆயுதமேந்தி
அலையலையாய் வான்புலியாய் கரும்புலியாய்

செங்களமாடும் எம் வீரர் தம் வேகுதியில் சிதறும்
சிங்கள சேனை அடங்கும் வேளை அருகினில்
ஆர்ப்பரிக்கும் ஆணவசெருக்கும் ஆதிக்கவெறியும்
ஆயுதம் தரித்த சிங்கள காடையர் தம் கால்
பிடிக்கும் காலிக்கூட்டமும் காணாமல் போகும்

என் வீரம் செறிந்த மண்ணின் வித்துக்கள்
விளையும் பூமி இது யாரும் வீணாகிப்
போனதில்லை அவர் தம்வீரமும் இணை
இல்லா தியாகமும் அழிவதில்லை அவர்
தம் மண்ணும் வீரம் சொரியும் பூமி

No comments:

Post a Comment