Monday, October 29, 2012

ஒரு வார்த்தை சொல்வாயா...


முதல்பார்வையில் மலர்ந்த காதலினால்
மோகனராகத்திலும் ஓர் மௌனராகமாய்
இதயத்திற்குள் இதயராகமாய்
இசைமீட்டுகின்ற உன் நினைவலைகள்

உன் செவ் இதழ் புன்னகைக்குள்
உறைந்து போகின்ற என் மூச்சுக் காற்றே
என் காதல் தேவதையே..! ஒருமுறையேனும்
உன் மூச்சால் சுவாசம் கொடுக்க மாட்டாயோ

பின்னிய நீண்ட கருங்கூந்தலுக்குள்
பின்னிவிட்ட என் மனதின் ஏக்கம் தீர
மீண்டும் காதல் பார்வையினை ஒருமுறையேனும்
கன்னியவள் என்னை பார்த்திட மாட்டாயோ

உயிர் என உன்னை நிதம் நினைத்து
உன்னை என்னுள் சிறைவைத்து
நிஜமாய் என்றும் என்னுடன் நீயிருக்க
நிழலாய் உனக்குள் என்னை புதைத்துக்கொண்டு
சிலிர்த்த என் கனவுகளுக்குள் மிதந்தே
புல்லரித்துப் போகின்ற என் ரோமங்களை
அமைதியாய் அடங்கிட.. ஒருமுறை ஒரேஒருமுறை
அன்பாய் காதலிக்கிறேன் என்று ஒரு வார்த்தை
சொல்வாயா... என் செல்லமே..

No comments:

Post a Comment