Sunday, October 28, 2012

அகிலமெல்லாம் பொங்கிடும் - தமிழுக்கு அவர்தானே உயிர் கொடுத்தார்

அன்னை தமிழின் அழகை உலகம் எல்லாம் சேர்த்தார்
அழகானஎம் தமிழில் ஒர் நாட்டை தமிழீழம் அமைத்தார்
உயிரான எம் தமிழ் உலகம் பரந்த்து பட்டொளி வீச

தமிழர் இல்லம் அமைத்தார் எங்கள் தானைத்தலவன்
அவர் வழிகாட்டலில் தரணி எங்கும் பொங்கும் தமிழ்
மெல்ல இனி சாகும் தமிழ் என்று உரைத்தவர்கள்
எம்புலம் பெயர் மழலைகள் தமிழ் கேட்டால் நாணுவர்

எம் மக்கள் மாக்கள் அல்ல அவர் மானிடம் பேணும்
மேலான எம் மனிதர்கள் சகிப்பில் உயர்தவர்கள்
தமிழ் போல் வரும் வார்த்தைகளை ஏற்கும்
உயர்வான குணக்குன்றுகள் என்றும் தலை வணங்கா

இனிய அழகிய தமிழ் போல் காலம் எல்லாம் கரையாது
உயர்வாய் அழகாய் எம் தமிழ் வாழ எம் உறவுகளே வாரீர்
எம் தமிழிற்காய் தலவன் பணியில் அம் மாவீரன் கனவுகள்
நிஜ்மாக அவர் கரம் பற்றி தொடர்வோம்

No comments:

Post a Comment