Sunday, October 28, 2012

மரணஓலம் கேட்கிறதா... ? ? ?


வான்வெளியில் பாய்ந்து வந்த இரும்புப்பறவைகளால்
கண் மூடித்திறக்கும் நிமிடத்துளிகளுக்குள்
எம் தேசத்து பள்ளி சிறார்களின்
உதிரமெல்லாம் உறைந்து போனதே

வானம் பார்த்து விழிமூடிக் கிடக்கும்
செஞ்சோலையில் எங்கள் பிஞ்சுகளின்
செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே
முல்லையின் மரண ஓலம் உங்களுக்கு கேட்கிறதா.. ?

பாயிலே படுக்க வைத்து பெற்றோரும்
மற்றோரும் கதறியழ பார்த்த கண்களும் கலங்கி
னத்த நெஞ்சுடைக்கும் கதறி அழும் ஓலத்தில்
மனங்களும் விழிசிந்தி வலிகளை வலிமையாக்கி
வலிகளை செலவு செய்ய முன் வருவோமா... ?

செங்குருதி குடித்த இரும்புப் பறவைகளே
முல்லையின் மரண ஓலம் உங்களுக்கு கேட்கிறதா.. ?

30.10.2006

No comments:

Post a Comment