காற்றே வீசுகின்ற இதமான பூங்காற்றே
காற்றே தென்றலாய் தவழ்ந்து வந்து
இதயத்தை வருடுகின்றாய்
காற்றே மலர்களிலும் இலைகளிலும்
தடவி வாசம் தனை பரப்புகின்றாய்
காற்றே பசுமையாய் நிகழ்வுகளை
அசை போட வைக்கின்றாய்
காற்றே நெருப்பாய் உயிர் பெற்று
இதயத்தை கலங்க வைக்கின்றாய்
காற்றே உன் ஓட்டம் நின்றுவிட்டால்
உடலும் வெற்று உடல்தானே
காற்றே புயலாக வந்து மரம் வீடு
அனைத்தையும் சாய்க்கின்றாயே
கால்கள் இன்றியே புயலாக மாறும் காற்றே
நீரை கயிறாகத்திரித்து அலையாக சூறாவளியாக
கடல் ஒரத்து பட்டு மணல் மீதினிலே
பல உயிர்களை கொன்று குவித்தாயே
காற்றுக்கும் உருவமில்லை
கடவுளுக்கும் உருவமில்லை
காற்றே காற்றே உன்னையும்
கடவுளாய் கண்மூடி வணங்கினால்
இயற்கை அழிவுதான் போய் விடுமா
11.10.2006
No comments:
Post a Comment