Monday, October 29, 2012

அறுபடும் வேரும் அந்நியமாகும் உறவுகளும்

user posted image


புலம் பெயர்ந்தது வந்ததால் நெஞ்சில்
ஓயாமல் ஓலமிடும் சொல்லோன்னா ஏக்கங்கள்
உறவுளை விட்டுப் பிரிந்துவந்த துயர்கள்
அறுபட்டுப் போன வேராக அகதி வாழ்வில்
அடியெடுத்து வைத்த கதையின் ஆரம்பங்கள்

நிலா வெளிச்சத்தில் கூடி மகிழ்ந்த பொழுதுகள்
கோயில் குளம் என்று கூடி மகிழ்ந்த நினைவுகள்
உற்றார் உறவினருடன் கூடி மகிழ்ந்துண்ட பொழுதுகள்
ஆழம் விழுதாய் ஆறுதலாய் கூடி இருந்த உறவுகள்
அறுந்த உறவுகளாக புலத்தினில்

தமிழன் இல்லாத நாடும் இல்லை
தமிழனுக்கு என்று ஒரு நாடுமில்லாமல்
எட்டுத்திசையெங்கும் சிதறி வாழும் எம் இனம்
அறுபட்ட வேறாய் அங்கும் இங்குமாய்
அந்நியமாகிப்போன உறவுகளாய் ஆகிவிட்ட நிலை

அறுபட்ட வேர்கள் மீண்டும் படர்ந்திடும் உறவாய்
எப்போ எங்கே இணைந்த சமுதாயமாய் மலர்ந்திடுமா
அந்நியமாகிப்போன உறவுகள் மீண்டும் ஒன்றிணைந்த
தமிழீழத்தில் மீண்டும் துளிர்த்திடுமோ

No comments:

Post a Comment