ஆதவனின் எச்சம் வெளிச்சமாய் அந்த
வெளிச்சத்தின் நெருப்பின் எச்சம் மிச்சமாய்
வெண்ணுடலில் பட்டுத் தெறிக்க
வெக்கை... எங்கும் ஒரே வெக்கையாய்
வியர்வைத்துளிகள் பூத்ததுவே...
அழிவிற்கும் உறுதுணையாய்
ஆக்கத்திற்கும் உறுதுணையாய்
இருள் அகற்றும் வெளிச்சமாய்
இந்த பிரளயம் எங்குமே வியாபித்திருக்கும்
இருள் அகற்றும் விளக்காய் சூரியன்
தினம் தினம் வெளிச்சம் வெளியிலே
மனதின் வெளிச்சம் மனசுக்குள்ளே
பாருக்குள்ளே நல்ல மனங்களின் தரிசனங்கள்
மனதின் முகத்தினில் வெளிச்சங்களாய்
22.06.2006
No comments:
Post a Comment