Monday, October 29, 2012

நான் தாயாக......


தத்தி தளிர் நடை நடக்கையில் என்
தளிர் பாதம் நோகும் என்று என்னை
உள்ளங்கையில் தாங்கியவள் நீ அம்மா
கலங்கிய போதெல்லாம் என்னை நீ
அணைத்துக் கொண்டது உன் மார்பல்லவா
நான் துவண்டாலும் தோள் தந்து
நம்பிக்கை தந்தவளும் நீதானம்மா.
உன்னை உருக்கி
என்னை உருவாக்கிய அம்மா.
வயோதிப காலமதில்
நான் உனக்கு தாயாகும் நிலை
வேண்டும் வேண்டும் என்றே என் மனம்
துடிக்கின்ற துடிப்பின் நிஜங்கள்
நிழலாக மாறுகின்ற காலமதில்
மனம் மனதார வாழ்த்துகின்றது
நோய் நொடியின்றி நீ வாழ வேண்டுமம்மா.....

என் கனவு நனவாக அம்மா.... உன்
வயோதிப காலமதில்
நான் உனக்கு தாயாகும் நிலை வேண்டுமம்மா
21.03.2004

No comments:

Post a Comment