உள்ளங்கைத் தண்ணீராய் காலம் கை நழுவி நழுவி ஓடுகிறது வெட்ட வெட்ட வளரும் நகமும் இல்லை கூந்தலும் இல்லை இது வாழ்க்கை காலத்தின் ஒட்டத்தில் கைகோர்த்து கனவுகளை சுமந்து கொண்டு வாழ்ந்து களைத்து காலமாகிவிடுதல் வாழ்வில் ஒர் அத்தியாயமாய் காலம் கரைகிறது முழுநிலா தேய்ந்து தேய்ந்து பின்னே வளர்பிறையாய் வளர்வது போலே எம் வாழ்க்கை இப் புவியில் இல்லை நிகழ்காலம் அதில் நிமிடத்துளிகள் அனைத்தையும் உணர்ந்தே ரசனையுடன் அனுபவித்தே வாழ்ந்திடுவோம் காலம் வந்தால் இலைகள் மரத்தில் தங்காது காலம் வந்தால் உயிர் உடலில் தங்காது
No comments:
Post a Comment