வஞ்சனை எண்ணத்துடன் சிறீலங்கா
இராணுவத்தினர் வக்கணையாய்
வீசிய எறிகணைத் தாக்குதலில்
வசமாய் மாய்ந்தார்களே எம் உறவுகள்
மறக்குமா நெஞ்சம் மறக்குமா
தஞ்சம் என்றே வாகரை பாடசாலையிலே
புகுந்திருந்த வேளையில்
உயிர் துறந்த எம் உறவுகளை
படுகாயம் அடைந்த உறவுகளை
நினைக்கையில் உயிர் உள்ளவரை
மறக்கத்தான் முடியுமா நெஞ்சே
அப்பாவி தமிழ் மக்களின் உயிர்
அநியாயமாய் பறிபோவதை எண்ணியும்
அத்தியாவசிய பொருட்கள் இன்றி
மக்கள் படும் அவதிகளை எண்ணிடும்
வேளையில் மனம் படும் வேதனைகளை
நினைக்கையில் நெஞ்சம் தான் மறக்குமா
10.11.2006
No comments:
Post a Comment