Sunday, October 28, 2012

மறக்குமா நெஞ்சம் மறக்குமா


வஞ்சனை எண்ணத்துடன் சிறீலங்கா
இராணுவத்தினர் வக்கணையாய்
வீசிய எறிகணைத் தாக்குதலில்
வசமாய் மாய்ந்தார்களே எம் உறவுகள்
மறக்குமா நெஞ்சம் மறக்குமா

தஞ்சம் என்றே வாகரை பாடசாலையிலே
புகுந்திருந்த வேளையில்
உயிர் துறந்த எம் உறவுகளை
படுகாயம் அடைந்த உறவுகளை
நினைக்கையில் உயிர் உள்ளவரை
மறக்கத்தான் முடியுமா நெஞ்சே

அப்பாவி தமிழ் மக்களின் உயிர்
அநியாயமாய் பறிபோவதை எண்ணியும்
அத்தியாவசிய பொருட்கள் இன்றி
மக்கள் படும் அவதிகளை எண்ணிடும்
வேளையில் மனம் படும் வேதனைகளை
நினைக்கையில் நெஞ்சம் தான் மறக்குமா

10.11.2006

No comments:

Post a Comment