Sunday, October 28, 2012

கண்ணீர் அஞ்சலிகள்


நா கொண்டு நாடு நாடாய் போராடி அடி
நாதமாய் தமிழீழத்தின் ராஜகுருவாய்
மதியுரைஞராய் பிரகாசித்தவேளையில்
பிரிவுத் துயரம்
இடியாய் செவியில் விழுந்த சேதி
இதயத்தை துடிக்க வைக்கின்றதே

விடுதலைக் கனலை இதயத்தில்
விருப்புடன் சுமந்து இறுதிவரை
விடாது ஒயாது உழைத்து
விடுதலைக்கு உயிர்மூச்சாய் நின்று
நோயுடல் வாட்டும்போதும்
நிமிர்ந்தே நின்று உழைத்த
உத்தம வீரர் அவர்

தலைவரின் அருகில் நின்று
தலைவரின் பக்கபலமாய் வலதுகையாய்
தலைமை தாங்கி நின்று
தேசத்தின் விடுதலைக்கு குரல் தந்த
பாலா அண்ணாவின் ஆத்மா
சாந்தியடைய கண்ணீர் அஞ்சலிகள்
14.12.2006

No comments:

Post a Comment