நா கொண்டு நாடு நாடாய் போராடி அடி
நாதமாய் தமிழீழத்தின் ராஜகுருவாய்
மதியுரைஞராய் பிரகாசித்தவேளையில்
பிரிவுத் துயரம்
இடியாய் செவியில் விழுந்த சேதி
இதயத்தை துடிக்க வைக்கின்றதே
விடுதலைக் கனலை இதயத்தில்
விருப்புடன் சுமந்து இறுதிவரை
விடாது ஒயாது உழைத்து
விடுதலைக்கு உயிர்மூச்சாய் நின்று
நோயுடல் வாட்டும்போதும்
நிமிர்ந்தே நின்று உழைத்த
உத்தம வீரர் அவர்
தலைவரின் அருகில் நின்று
தலைவரின் பக்கபலமாய் வலதுகையாய்
தலைமை தாங்கி நின்று
தேசத்தின் விடுதலைக்கு குரல் தந்த
பாலா அண்ணாவின் ஆத்மா
சாந்தியடைய கண்ணீர் அஞ்சலிகள்
14.12.2006
No comments:
Post a Comment