Sunday, October 28, 2012

என்னாவாயிருந்தால் பிடிக்கும்


பால் மணம் மாற பச்சிளம்
பத்து மாதக் குழந்தையாய்
தத்தித் தவழ்ந்து நடை பயின்று
உண்ண மறுத்து அன்னத்தில் அலைந்தும்
என்ன என்று சொல்லத் தெரியாமல்
கணப்பொழுதும் அழுது வடியும்
வயதினில் என்னை உனக்கு பிடிக்குமா ?

கள்ளம் கபடம் இல்லாமல் ஓடியாடும் வயதினில்
பள்ளிப் பருவத்தினில் பாடங்களில் அதிக
புள்ளிகளை எடுத்து சித்தி எய்திட்டபோது
அள்ளி அணைத்திட்ட எல்லையில்லா
பள்ளிப்பருவம் தான் உனக்கு பிடிக்குமா ?

பருவம் எய்திய போது என் உடலின்
உருவ மாறுதலைக் கண்டே என்னை
கண்காணித்து காத்திருப்புக்களுடன்
கனவுகள் பல சுமந்து இருக்கும்
வயதில் இருக்கும் என்னை பிடிக்குமா ?

அம்மா நான் என்னவாயிருந்தால் பிடிக்கும்
சும்மா சொல்லம்மா...
சின்னவளாக இருந்தபோது
பெரியவளானால் நல்லது என்றாயே...
பெரியவளான பின்னே...
சின்னவளாயிருந்தால் நல்லாயிருக்கும் என்றாயே

21.10.2006

No comments:

Post a Comment