பால் மணம் மாற பச்சிளம்
பத்து மாதக் குழந்தையாய்
தத்தித் தவழ்ந்து நடை பயின்று
உண்ண மறுத்து அன்னத்தில் அலைந்தும்
என்ன என்று சொல்லத் தெரியாமல்
கணப்பொழுதும் அழுது வடியும்
வயதினில் என்னை உனக்கு பிடிக்குமா ?
கள்ளம் கபடம் இல்லாமல் ஓடியாடும் வயதினில்
பள்ளிப் பருவத்தினில் பாடங்களில் அதிக
புள்ளிகளை எடுத்து சித்தி எய்திட்டபோது
அள்ளி அணைத்திட்ட எல்லையில்லா
பள்ளிப்பருவம் தான் உனக்கு பிடிக்குமா ?
பருவம் எய்திய போது என் உடலின்
உருவ மாறுதலைக் கண்டே என்னை
கண்காணித்து காத்திருப்புக்களுடன்
கனவுகள் பல சுமந்து இருக்கும்
வயதில் இருக்கும் என்னை பிடிக்குமா ?
அம்மா நான் என்னவாயிருந்தால் பிடிக்கும்
சும்மா சொல்லம்மா...
சின்னவளாக இருந்தபோது
பெரியவளானால் நல்லது என்றாயே...
பெரியவளான பின்னே...
சின்னவளாயிருந்தால் நல்லாயிருக்கும் என்றாயே
21.10.2006
No comments:
Post a Comment