Monday, October 29, 2012

விடியல்..


கண்வழி புகுந்து காதல்மொழி பேசி
கண்ணே கண்மணி கற்கண்டே என்றே
காதோரம் கவிபல சொல்லி சொல்லியே
கவிழ்த்துவிட்ட கள்வன்

உதடுகள் தினம் உன்பெயர் சொல்ல
உன் நினைவுகள் என் மனதை வருட
நெஞ்சம் முழுவதும் நீ நிறைந்திருக்க
நித்திரையிலும் மீட்டெடுத்தேன் உன்னை

பூப்போன்ற மனதை பொக்கிஷமாய்
பூப்போல் வைத்திருப்பேன் என்றும்
முள்ளாய் நானிருந்து மலரே உன்னை
முழுவதுமாய் காத்திடுவேன் என்றான்

தொடர்ந்த காதல் படந்தது
ஊடலாய் கூடலாய் ஊர்ந்தன
எட்டு மாதங்கள் கடந்தபின்னும் நீ
எட்டத்திலும் நீ எட்டவில்லை

இரவுநேர ஒத்திகைக்கு பின்னே
இருள் சூழ்ந்தது என் வாழ்க்கையில்
விடியல் இல்லை ஒரு
விடியலும் இல்லை

No comments:

Post a Comment