Sunday, October 28, 2012

மௌனங்கள் வேண்டாம்


சொல்லத் துடித்த வார்த்தைகள்
சொல்லாமல் போய்விட்ட மௌனங்கள்
சிந்திக்கத் தவறிவிட்ட சிந்தனைத்துளிகள்
சிதைந்து விட்ட வாழ்வின் நிகழ்வுகள்

மரணிக்க வைத்திட்ட நினைப்புக்கள்
மயங்கிய வாழ்வினுள் அகப்பட்டு
தூக்கினுள் தழுவிக்கொண்டபோது
நாக்கு மட்டும் வெளியே தள்ளியபடியே
நலிந்து போன இதயத்தின் மௌனங்கள்
வார்த்தைகளை மரணிக்கச் செய்ததே

மௌனங்கள் வேண்டாம் மனமே
மனதின் வார்த்தைகள் தனை மொழிந்து
மௌனத்தினை கலைத்திடு மனமே

30.06..2006

No comments:

Post a Comment