இதயம் தொலைத்து என்நிலை மறந்து
இதயம் தனில் உன்னையே நிருத்தி
இமைக்கும் பொழுதிலும் உன் நினைவாய்
இங்கிதமாய் இனித்திடும உரசும் பொழுதுகளில்
எனக்குள் உருவாகிடும் இன்னொரு உயிர் நீதான்
அன்னநடையாய் சிங்காரமாய் அடியெடுத்துவைக்கும்
பட்டுத்தளிர் மேனி அவள் பாதமோ செந்தாமரை
அவள் இடுப்பினில் படபடக்கும் விழி நொடிப்பினில்
அலைமோதும் தேனுண்ணும் வண்டாய்
அவள் பின்னல் முடிப்பினில் என் மனம்
அலையாய் ; பின்னலோடு பின்னித்தான் போனதே
பால்வண்ணம் அவள் முகம் அதில்
செவ் இதழ் பரப்பிய செம்பவள உதடுகள்
செவ்வனே ஒருமுறை ஒரே ஒருமுறை
நோட்டம்விட்டதால் வந்த வேலை மறந்து
வேலையையும் கோட்டைவிட்டேன்
29.06.2006
No comments:
Post a Comment