Sunday, October 28, 2012

ஆடி வரும் வேளையிலே...


கொடி இடை அவளின் துடிஇடை அழகும் விழி
மூடித் திறக்கும் அவளின் பட்டுச் சிறகு இமைகள்
சூடிக் கொண்ட மலர் படுக்கைகளின் 
நெடி மூக்கைத் துளைத்து எடுக்க
வடித்த சிலையின் மறு உருவமோ என்ற அழகு
கோடி கொட்டிக் கொடுத்தாலும் இணையாகுமா
அடிமனதின் ஆசைகள் ஆழமாய் பதிந்ததே

ஆடிக்குப் பின் ஆவணி என்பதுபோல்
தாடிக்குப்பின் தாவணி என்றே கறுப்புத்
தாடியுடன் தவமிருக்கும் தவக்கோலமுடன்
லேடி அவளின் நினைப்புக்கள் நித்தமும் மலர
மாடி வீட்டு முற்றத்தினில் தோகைமயில்
தோடி ராகத்துடன் பாடிய பாடல் கேட்டும்
படி இறங்கவில்லை பைந்தமிழ் பாவை அவள்

நொடிக்கு நூறுதடவை அவளை நோக்கியும்
அடியேனை நோக்கவில்லை நோக்கியா கையிலிருந்தும்
வாடி என் செல்லமே என்று சொல் ; லி ஒரு எஸ்.எம்.எஸ்
வடிக்காமலே வாழ்வினிலே ஒன்று கூடி
ஜோடி சேர்ந்து வாழ நினைத்தேன்
பொடி வைத்துப் பேசவில்லை பழகவில்லை
போடி என்று சொல்லவும் மனசில்லை மனதினில்
படிந்த உருவம் தேடி வந்த உறவாய் என்றும்
ஆடி வரும் தென்றலில் இதமாய் தாலாட்டாய்
ஆடி வரும் வேளையில் ஊஞ்சலாய் அவள் நினைவுகள்

30.07.2006

No comments:

Post a Comment