Monday, November 5, 2012

தொலைபேசி தொல்லைபேசியான கதை

டெலிபோன் மணி இடைவிடாமல் அடிச்சுக்கொண்டே இருக்கின்றது. நல்ல நித்திரையிலிருந்த என்னை எழுப்பி விட்டது. டெலிபோனை எடுப்போமா  எண்டு யோசிச்சிககொண்டு நேரத்தை பார்க்கிறேன். நேரம் காலை 3.00 மணி. ஒருவேளை அம்மாதான் கொழும்பிலிருந்து அடிக்கிறாவா எண்டு நினைச்சுக் கொண்டு ஓடிப்போய் போனை எடுக்கிறேன். 
அம்மாதான் போனில்.
அம்மாவின் குரல் கேட்டதும் காலையில் பறவையினங்கள் ஒலி கேட்டால் எப்படி சந்தோசப்படுமோ அது மாதிரிதான் அம்மாவின் குரலைக்கேட்டதும் எனக்கும் சந்தோசம். கதைச்சு முடிந்தபின் மனசில ஒரு கவலை. அம்மாவின் மடியில் படுத்து ஒருமுறை பிரிஞ்சிருக்கிற துக்கத்தை நினைச்சு ஒருக்கா கண்ணீர் விட்டு அழனும் போலிருந்தது. அந்த நினைப்போடு அப்படியே தூங்கி விட்டேன்.

அதற்குள் திருப்பியும் டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரையை குழப்பிட்டுது.  டெலிபோன் இப்படியா எண்ட நித்திரையை குழப்பவேணும் . கொஞ்சம் கோபமாகவே அலோ சொல்கிறேன்.
மறுமுனையில் இந்தியாவில் இருக்கிற என்னுடைய மாமா .
புதுசா ஒரு handphone வாங்கினேன்.வேலை செய்யுதா என்டு ஒருக்கா பார்க்கவேணும் என்றார். 
ஓ......அதுக்கென்ன மாமா .நீங்கள போனை வையுங்க ஒரு நிமிசத்தில் அடிக்கிறேன். நம்பரைத்தாங்கோ என்று நம்பரை வாங்கிக்கொண்டேன்.
என்ன செய்யிறது மாமாவாச்சே மாமாவுக்கு மகன் வேற இருக்கிறார். அடிக்காமல் இருக்கமுடியுமா . அவரோடும் கதைத்துவிட்டு திருப்பியும் சுருண்டு நித்திரையாகிட்டேன்.

திருப்பியும் மறுபடி டெலிபோன் மணி அடிச்சி எண்ட நித்திரைய குழப்பிட்டுது. 
அட கடவுளே இது என்ன திருப்பி எரிச்சலோடு நித்திரை மயக்கத்தில் அலொ என்கிறேன்.
மறுமுனையில் ஓர் உரத்த ஒலியில் 
ஹாலோ கறுப்பி இருக்கிறாவா? 
முன்பின் கேட்டிராத கரகரப்பான குரல் கேட்டவுடன் கொஞ்சம் பயந்துட்டேன்.
நீங்க யாருணு திருப்பி கேக்கிறேன்.
நான் தான் சாத்திரி என்கிறார்.
என்ன விசயம் என்று கேட்கத்தொடங்கியவுடனே எனக்கு ஏதும் வரண்தான் கொண்டு வந்திருக்கிறார் என்ற சந்தோசத்தில் கட்டிலில் ஏறி துள்ளிக் குதிக்கனும் போலிருந்தது.
ஆனால் அதற்குள் அவரே கறுப்பியின்ட போன் நம்பர் கிடைச்சிது . அதுதான் ஊருக்கு எடுத்த டெலிபோன் காட்டில் கொஞ்சம் கதைக்கலாம எண்டு சொல்லிச்சிது அதுதான் எடுத்தனான் எண்டு ஓர் இழுவல் கதை. அத்தோடு இணைப்பும் அறுந்து போச்சுது.
ஆ.........இது என்ன வம்பாப் போச்சே.. எண்ட சந்தோசமும் கூடவே போச்சுதே.

சாத்திரியின் நம்பரை டயரியின் பக்கங்களை   தேடி எடுத்து புரட்டி போன் பண்ணுகிறேன்.
ஹலோ என்கிறேன்.

மறுமுனையில் அதே கரகரத்த குரல் ஹலோ என்றவுடன் மெளனம்.

வீட்டில் ஒரு அம்மணியின் குரல் மட்டும் மெதுவாய் கேட்கிறது.

இப்ப எதுக்காக உந்த விடியக்காலத்துல லண்டனுக்கு போன் போட்டு கதைச்சிக்கொண்டு நிற்கிறியள். தெரிங்சவங்களோட போனில கதைக்கிறதுக்கே நேரமில்லை எண்டு சந்நதம் ஆடுறிங்கள்.  அதுக்குள்ள உந்த கறுப்பிக்கோ காப்பிலிக்கோ போனை போட்டுக்கொண்டு..............

ஆஆஆஆஆஆஆஆஆ.......இதுக்கும் மேலே கேட்டா எண்ட காதை வெடிச்சுடும் போனை அப்படியே சத்தமில்லாம வைச்சுட்டேன்.
அப்போதான் தெரிஞ்சது அங்கே மதுரை மீனாட்சி ஆட்சி நடக்குது எண்டு. அவர் வெளியில புலி. வீட்டில பூனை எண்டு.

இப்படியெல்லாம் தொல்லைபேசியின் தொல்லை அதிகம் 

காற்சட்டையின் நீளத்தின் அளவை குறைப்பது எப்படி?

தேவையான பொருட்கள் படத்தில் காட்டியவாறு எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கால்சட்டையின் கால்பகுதியில் காணப்படும் பட்டித்துண்டை பிரித்து எடுத்து வையுங்கள்.
பிரித்த கால்சட்டையை கீழாகவும், அளவு கால்சட்டையை மேலாக வைத்து அயன் (iron) பண்ண வேண்டும்.
ஏற்கனவே மடிக்கப்பட்டிருந்த அளவை டேப்பால் அளந்து வைக்க வேண்டும்.
எடுத்த அளவை தைக்க வேண்டிய காற்சட்டை மடிப்பில் இருந்து அடையாளப்படுத்தி வெட்டி க் கொள்ளவும்.


அளவு காற்சட்டை அளவுக்கு காலை மடித்து, புறப்பக்கமாக முன்பு பிரித்து வைத்த பட்டித்துண்டை வைத்து ஊசிகளால் குத்தி வைக்க வேண்டும். பட்டித்துண்டை வைக்குப்போது அதன் நுனி காலின் அடிப்பகுதியில் சற்று தெரிந்தமாதிரி வைக்கவேண்டும். 
அதை பின்புறமாக திருப்பி பட்டித்துண்டின் இரு புறத்திலும் தைக்கவேண்டும். தைத்த பின் பார்த்தால் கால்சட்டையின் சரியான பக்கத்தில் தையல் ஒன்றும் தெரியாமல் இருக்க வேண்டும்.

கால்சட்டையின் காலின் அடிப்பகுதியையும் (விளிம்பை) மடித்து தைக்கவேண்டும் .

கால்சட்டையின் சரியான பக்கத்தில் தையல் ஒன்றும் தெரியாமல் இருக்கும் இந்த மடிப்பு கால்சட்டையுடன் இணைந்திருக்க இந்த தையல் தேவைப்படுகிறது.
அதன் விபரம் சிறு விளக்கத்துடன்.


இறுதியாக காற்சட்டையை அயன் செய்ய வேண்டும்.
நன்றி